மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை – முக்கிய அப்டேட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டு முதல் 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்காது. மேலும் கொரோனா மாற்றத்தின் போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி மூன்று தவணைகளுக்கு பணம் வழங்கப்படாது. இந்நிலையில், இந்த தகவல் 18 மாத டிஏ பாக்கிக்காக காத்திருக்கும் பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
முக்கிய அப்டேட்:
2020-ம் ஆண்டு கொரோனா தொற்று ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் மிகுந்த சரிவு ஏற்பட்டதையடுத்து, 1.1.2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் கொரோனா நிலை சீராகி வந்ததால்,ஊழியர்களுக்கான அகவிலைபடி 1.1.2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பணப் பயன் 1.7.2021 முதல் அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 34 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது என்பது குறிப்பித்தக்கது.
மே 2 முதல் ஜூன் 15 வரை பள்ளி & கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. மேலும் DA நிலுவைத் தொகையை பொறுத்தவரையில், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிஏ நிலுவைத் தொகை தற்போது வழங்கப்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நிலுவைத் தொகை வழங்குவது குறித்து எந்த சிந்தனையும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த நிலுவை தொகை 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
கொரோனா கால கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை அகவிலை நிவாரணப் பாக்கியை உடனடி நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்க ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களுக்கான டிஆர் மற்றும் டிஏ நிலுவைத் தொகை ரூ.34 ஆயிரம் கோடி ஆகும். ஓய்வூதிய விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான தன்னார்வ முகமைகளின் நிலைக்குழுவின் 32வது கூட்டத்தில், செலவினத் துறையின் (டிஓஐ) பிரதிநிதி, முந்தைய டிஏ மற்றும் டிஆர் நிலுவைகள் விடுவிக்கப்படாது என்று தெளிவுபடுத்தினார். ஜூலை 1, 2021 முதல் டிஏ மீதான தடை நீக்கப்பட்ட பிறகு, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.