மே 2 முதல் ஜூன் 15 வரை பள்ளி & கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

0
மே 2 முதல் ஜூன் 15 வரை பள்ளி & கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
மே 2 முதல் ஜூன் 15 வரை பள்ளி & கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
மே 2 முதல் ஜூன் 15 வரை பள்ளி & கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

மேற்கு வங்கத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக மே 2ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு மேற்கு வங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, கல்வி நிறுவனங்களுக்கு 45 நாட்கள் விடுமுறை ஆகும். இந்த விடுமுறை குறித்து ஆசிரியர் சங்கம்,நீண்ட இடைவெளி குழந்தைகளின் பள்ளி செல்லும் பழக்கத்தை பாதிக்கும் என்று கூறுகிறது

கோடை விடுமுறை:

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் பல்வேறு தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கின. இதனால் கடந்த பிப்ரவரி 16 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கோடை வெயில் சுட்டெரிப்பதால், கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் மே 2ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.மேற்கு வங்க பள்ளிக்கல்வித்துறை மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம் (WBBSE) மற்றும் மேற்கு வங்க முதன்மைக் கல்வி வாரியம் (WBBPE) ஆகியவற்றுக்குக் அனுப்பிய கடிதத்தில் மே 2 முதல் ஜூன் 15 வரை கோடை விடுமுறையை அறிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக மே 2ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்கூட்டியே அறிவுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசும் போது, ‘நாங்கள் கடுமையான கோடை வெப்பத்தை அனுபவித்து வருகிறோம். இதுபோன்ற வெயிலுக்கு மத்தியில் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். முடிந்தால் பள்ளிகளுக்கு மே 2 முதல் கோடை விடுமுறையைத் தொடங்க கல்வித்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். தனியார் பள்ளிகளும் இதே போன்ற நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? புதிய பாடத்திட்டம் வெளியீடு!

இப்போது முதல்வரின் இந்த அறிவுறுத்தலுக்கு பிறகு, கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் மே 2 முதல் ஜூன் 15 வரை கோடை விடுமுறை என்று அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். இருப்பினும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மற்றும் கலிம்போங்கில் உள்ள பள்ளிகளில் மட்டும் தற்போதுள்ள கல்வி அட்டவணை அடுத்த உத்தரவு வரை தொடரும் என்று மேற்கு வங்க அரசின் முதன்மைச் செயலர் மணீஷ் ஜெயின் கையெழுத்திட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத போது பின்னடைவைச் சந்தித்த மாணவர்களின் பள்ளிக்குச் செல்லும் பழக்கத்தை நீண்ட கோடை விடுமுறை பாதிக்கும் என்று ஆசிரியர் சங்கம் கூறுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!