18 மாத கால அகவிலைப்படி நிலுவைத்தொகை – எப்போது? வழங்கப்படும்… ஊழியர்கள் கேள்வி!
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அகவிலைப்படி நிலுவை தொகை:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது ஊழியர்கள் மொத்தமாக 42 சதவீதம் அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.வரும் மாதங்களில் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு மீண்டும் வரலாம் என்றும் 3 – 4 சதவீதம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா கால கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவை தொகை எப்போது வழங்கப்படும் என்ற வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
தமிழகத்தில் நாளை (செப்.15) பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!
பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாகவே ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலுவைத்தொகை வழங்கப்பட்டால் ஒரு ஊழியருக்கு சுமார் 2 லட்சம் வரை கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் இதுவரை நிலுவை தொகை குறித்து அரசு எந்தவித அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.