ஆகஸ்ட் 16 வரை 144 தடை உத்தரவு அமல் – இரவு ஊரடங்கு 1 மணிநேரம் நீட்டிப்பு!
கொரோனா தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு கர்நாடகா மாநில அரசு ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி தினசரி இரவு ஊரடங்கு உத்தரவு 1 மணிநேரம் முன்னதாகவே தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்தது. இதனால் தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 40 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனையடுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!
அந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இரவு ஊரடங்கு உத்தரவை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக, மாநிலத்தில் இரவு 10 மணி முதல் இரவு ஊரடங்கு உத்தரவு தொடங்கியது குறிப்பிடத்தக்து. புதிய வழிகாட்டுதல்களின்படி, வார இறுதி ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை, ஆகஸ்ட் 6 முதல் 16 வரை அமலில் இருக்கும்.
லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை கண்டறிந்த பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இதற்கிடையில், பெங்களூரு காவல்துறையும், இரவு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, நகரத்தில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க ஆகஸ்ட் 16 வரை 144 தடை உத்தரவினை அமல்படுத்தி உள்ளது. மேலும் கர்நாடகா அரசு மகாராஷ்டிரா மற்றும் தக்ஷிணா கன்னடா, குடகு, மைசூரு மற்றும் சாமராஜநகர் மாவட்டங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் பெலகவி, பீதர், விஜயபுரா, கலபுரகி ஆகிய எட்டு மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.