இன்று முதல் ஜூலை 10 வரை 144 தடை உத்தரவு – காவல் துறை அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை வீழ்த்துவதற்காக சில போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கட்சிக்குள் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் முன்னணி தலைவர் மற்றும் மாநில அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கு எதிராக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமடையவும் வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம்எல்ஏக்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால், மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் கைகளில் கட்டை, ஆயுதங்கள், போஸ்டர்கள், கொடும்பாவி ஆகியவற்றை கொண்டு செல்ல கூடாது எனவும், மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் கூட்டமாகவோ, ஊர்வலமோ செல்லக் கூடாது எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும்,பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கவே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.