ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை!
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் தனது ஏர் இந்திய நிறுவனத்தில் மேலும் சில புதிய விமானங்களை வாங்க உள்ளது. அதனால் ஏற்கனவே தனது நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விவரத்தை பற்றி பார்ப்போம்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பாட்டில் இருந்த போது கடுமையான நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் இதனை தனியார் நிறுவனத்திடம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. இதையடுத்து ஏர் இந்திய நிறுவனம் லாபத்தை பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை டாடா மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய விமானங்களை வாங்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது விமானிகள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானிகளுக்கு 58 வயது ஓய்வு பெறும் வயதாகும். இந்த நிலையில் கொரோனா
கால கட்டத்தில் விமானிகளின் பற்றாக்குறையை கட்டுப்படுத்த ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இதனை தொடர்ந்து 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதால் ஓய்வு பெற்ற விமானிகளை மீண்டும் பணியில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் இவர்களுக்கு பறக்கும் படி உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகிற ஜூலை 23ம் தேதிக்குள் ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் ஓய்வு பெற்றவர்கள் மேலும் 5 ஆண்டுகள் வரை அதாவது 65 வயது வரையில் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியில் நியமிக்கப்படுவோருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம் தரப்படும் என்று ஏர் இந்தியா பணியாளர்களுக்கான துணை பொது மேலாளர் விகாஸ் குப்தா தகவல் தெரிவித்துள்ளார்.