தமிழகத்தில் 2வது நாளாக 144 தடை உத்தரவு – மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!
ஊருக்குள் புகுந்த காட்டுயானை தெருக்களுக்குள் சுற்றி திரிவதால் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு இன்றும் தொடருகிறது.
144 தடை உத்தரவு:
தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் தமிழக – கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று நுழைந்தது. தெருக்களில் அங்கும், இங்கும் கட்டுக்கடங்காமல் சுற்றி திரிந்து வருகிறது. வனத்துறையினர் இந்த அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்க தீவிர முயற்சிகள் செய்து வருகின்றனர்.
ரூ.2,000 நோட்டை வைத்து நெட்டிசன்கள் செய்யும் அலும்பு – சிரிப்பூட்டும் மீம்ஸ்கள்!
இதனால் நேற்று முதல் நாளாக கம்பம் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொத்தான நிலத்தில் இந்த யானை தற்போது புகுந்துள்ளது.
இதற்காக பொள்ளாச்சி பகுதியில் இருந்து 2 கும்கி யானைகள் வர வழக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் 2 வது நாளாக இப்பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதற்கிடையில் யானை உலவும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து ட்ரெண்டாகி வருகிறது