காவல்துறைகளில் 13,000 காலிப்பணியிடங்கள் – ஜூலை 2024க்குள் நிரப்ப முடிவு!!
இந்தியாவில் உள்ள மொத்த காவல் துறைகளில் 13,000 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் ஜூலை மாதத்திற்குள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை:
இந்தியா முழுவதும் உள்ள காவல்துறைகளில் உள்ள பல்வேறு ஜூனியர் பதவிகளில் 13,000 காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கவர்னர் வினய் குமார் சக்சேனாதெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக காலியாக உள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து 13,000 காலியிடங்களில் 3,521 பணியிடம் டிசம்பரில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
இது போக, 559 ஆண் தலைமைக் காவலர்கள், 276 பெண் தலைமைக் காவலர்கள், 1,411 ஆண் கான்ஸ்டபிள்கள், 573 ஆண் மற்றும் 284 பெண் வயர்லெஸ் ஆபரேட்டர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 418 தொழில்நுட்பப் பணியிடங்களும் காலியாக உள்ளது. இந்த 13,000 காலியிடங்கள் அனைத்தும் ஜூலை 2024 க்குள் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பணியிடம் நிரப்பப்படுவதில் போதுமான எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்களையும் தேர்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.