11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு..!
உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி பலபேரை பாதித்து வருகிறது. இதனால் ஏற்கனவே கொரோனா பாதித்த 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு கூறி இருந்தது. இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடம் தாமதமாக தொடங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதையடுத்து பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் கட்டளையிட்டுள்ளது. எனவே தேர்வுகள் நடக்க உள்ளதால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது தேர்வுக்கு ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்