தமிழகத்தில் ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் – விரைவில் ஊரடங்கு அமல்?
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 113 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
டெங்கு காய்ச்சல்:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பருவமழை பெய்துவரும் நிலையில் சிக்கன்குனியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களும் பரவ துவங்கிவிட்டது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 113 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாதத்தில் மொத்தமாக 230 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் சாலைகளில் நீர் தேங்காத வண்ணம் கவனித்துக்கொள்ளும்படியும், வீட்டருகில் இருக்கும் டயர், டிரம் ஆகியவற்றை அப்புறப்படுத்தும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போக, கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.