தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை ஆனது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 1 ஆம் தேதி அன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில், மார்ச் 4ம் தேதியான நேற்று பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கப்பட்டது.
SSC CPO SI வேலைவாய்ப்பு 2024 – 4187 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆனது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9844 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.