இந்தியாவுக்கு 11 கோடி கொரோனா தடுப்பூசிகள் – மத்திய அரசு விளக்கம்!!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு தேவையான 11 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த தடுப்பூசிகள் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு மக்களுக்கு செலுத்தப்பட்டது. முன்னதாக கொரோனா முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்கு செலுத்தப்பட்டது. பிறகு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட்டது.
NEET UG 2021 தேர்வுகள் ஒத்திவைப்பு? கொரோனா பரவல் எதிரொலி!!
இந்நிலையில் மீண்டும் மூன்றாவது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் துவங்கியுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்கான முன்பதிவுகளும் துவங்கியது. இந்த சூழலில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அறிவித்தபடி மே 1ஆம் தேதி தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை.
தவிர ரஸ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை வாங்க ரூ.1,723 கோடி ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த ஏப்ரல் 28ம் தேதி தெரிவித்தது. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, மே முதல் ஜூலை மாதங்களுக்கு தேவையான 11 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்