
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இலவச திறன் பயிற்சி – “வெற்றி நிச்சயம்” திட்டத்தில் 6 புதிய சான்றிதழ் படிப்புகள்!
தமிழக அரசின் தொழில் திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில், ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் “வெற்றி நிச்சயம் (Vettri Nichayam)” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்காக மொத்தம் 6 புதிய சான்றிதழ் படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ரோபோட்டிக்ஸ், 3D பிரிண்டிங், டிஜிட்டல் மார்கெட்டிங், ஆட்டோமேஷன், எலக்ட்ரிக்கல் டிசைன், மற்றும் மெகாட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கும்.
வனப்பகுதியை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள் – சுற்றுச்சூழலுக்கு முன்னுதாரணம்!
இந்தப் பயிற்சிகள் அரசு அங்கீகாரம் பெற்ற தொழில் பயிற்சி மையங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்பதும், வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம், இளைஞர்களின் தொழில்துறை திறனை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாக அரசு வலியுறுத்தியுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றும் அதிகாரப்பூர்வ தளம் மூலம் விரைவில் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























