கல்வி சுற்றுலாவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் – மாணவர்களின் பாதுகாப்பு முன்னுரிமை
தமிழக கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சுற்றுலா அனுபவத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கும் உருவாக்கப்பட்டவை. பள்ளிகள் சுற்றுலா திட்டத்தை முன்பே மாவட்ட கல்வி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும், பயண திட்டம், தங்கும் இடம், சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
வலுவான கல்வி அடித்தளத்துடன் சி.பி.எஸ்.இ. – மாணவர்களுக்கு புதுமையான கற்றல் அனுபவம்!
மேலும், ஆசிரியர்கள் மற்றும் குழுவினர் மாணவர்களை விழிப்புணர்வுடன் கவனிக்க வேண்டும். அவசர நிலைகளில் தொடர்பு கொள்ள வேண்டிய மருத்துவ மற்றும் அவசர சேவைகள் தொடர்புடைய தகவல்களை பெற்றிருக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், மாணவர்கள் பாதுகாப்புடன் பயணம் செய்து, கல்வி மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை முழுமையாகப் பெற முடியும். பள்ளிகள் அனைத்தும் இதனை கட்டாயமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


























