பள்ளி மாணவர்களுக்கு ஏஐ (AI) பாடம் அறிமுகம் கல்வித்துறையின் முக்கிய முன்னேற்றம்!
மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்திய கல்வி அமைச்சகம் புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு ஏஐ (Artificial Intelligence) பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் உலகம் முழுவதும் பெரும் வளர்ச்சி காணப்படுவதால், இதனை இளம் வயதிலிருந்தே அறிந்துகொள்வது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பெரும் பலனாக அமையும் என கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.
தாய்லாந்தில் ஆராய்ச்சி படிப்பு இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் சேர்க்கை அழைப்பு!
இந்த திட்டம் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங், ரோபோட்டிக்ஸ் போன்ற துறைகள் குறித்து அடிப்படை அறிவு பெறுவார்கள். இது எதிர்கால வேலை வாய்ப்புகள், ஆராய்ச்சி துறைகள் மற்றும் தொழில் முயற்சிகளில் அவர்களுக்கு வலுவான அடித்தளமாக இருக்கும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


























