அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடு தேர்வு கல்வித் துறை புதிய அறிவிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், கல்வித் துறை புதிய முயற்சியை அறிவித்துள்ளது. இதன்படி, இனி முதல் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகள் மூலம் மாணவர்களின் புரிதல், கற்றல் திறன் மற்றும் பாடத்திட்ட முன்னேற்றம் மதிப்பிடப்படும். மேலும் ஆசிரியர்கள் மாணவர்களின் பலவீனப் பகுதிகளை அடையாளம் கண்டு கூடுதல் கற்பித்தல் உதவி வழங்குவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஜாலி போனிக்ஸ்’ பயிற்சி
இந்த மாதாந்திர மதிப்பீடு தேர்வுகள் பள்ளி கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, பொது தேர்வுகளுக்கு முன் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் அமையும் என கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர். மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள் தேர்வுகளின் மதிப்பீடு முடிவுகளை பரிசீலித்து, பள்ளிகளின் செயல்திறனை மதிப்பிடும் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


























