மாநில அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 15 முதல் 20 நிமிடங்கள் வரை யோகா இடைவேளை!
அரியானா அரசு, அதன் அனைத்து துறைகள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் யோகாவை ஊக்குவிக்கும் பொருட்டு, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை எல்லோருக்கும் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் யோகா இடைவேளை (ஒய்-பிரேக்) வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
யோகா இடைவேளை:
இந்திய நாட்டு மக்களை கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவியதால் கடந்த 2020 முதல் அரசு அலுவலகங்களில் அவசர பாதுகாப்பு பணிகள் பாதிக்கா வண்ணம் 50% ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில், கடந்த பிப்ரவரி 9 முதல் அரசு அலுவலகங்களுக்கு 100% ஊழியர்கள் வருகைத் தர வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து அம்மாநில அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை தற்போது ஹரியானா அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? பழைய பென்ஷன் திட்டத்தின் பலன்கள்!
அரியானா கூடுதல் செயலாளர் (சுகாதாரம்) எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஹரியானா அரசு தனது அனைத்து துறைகள், வாரியங்கள் மற்றும் பிற அலுவலகங்கங்களில் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் யோகா இடைவேளை கொடுத்து யோகாவை ஊக்குவிக்க அறிவுறுத்தியுள்ளது. மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையானது, அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஒய்-பிரேக் ஐ தங்கள் பணியாளர்களிடையே பிரபலப்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, ஒய்-பிரேக் செயலியை தங்கள் அலுவலகங்களில் செயல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. யோகா (ஒய்-பிரேக்) கருத்து உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்களுக்குப் பொருத்தமானது.
Exams Daily Mobile App Download
அமைச்சகம் மற்றும் அரியானா அரசின் உத்தரவுப்படி, அனைத்து துறைகள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்கள், தங்கள் அலுவலகங்களில் ஒய்-பிரேக் செயலி வாயிலாக, யோகா இடைவேளை பயிற்சியை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தனிநபர்களின் மன அழுத்தத்தைத் தணிக்கவும், புதுப்பிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்யவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒய் பிரேக் முறை கடந்த ஜனவரி 2020 ஆம் ஆண்டு ஆறு மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில யோகா பயிற்சிகள் நாற்காலியில் உட்கார்ந்து செய்யக்கூடியவை மற்றும் சில நிற்கும் நிலையில் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.