தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? பழைய பென்ஷன் திட்டத்தின் பலன்கள்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? பழைய பென்ஷன் திட்டத்தின் பலன்கள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? பழைய பென்ஷன் திட்டத்தின் பலன்கள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? பழைய பென்ஷன் திட்டத்தின் பலன்கள்!

நாடு முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றி தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது

பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள்:

தமிழகத்தில், அதிமுக ஆட்சிக் காலத்தில், 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். ஊழியர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து,பங்குச்சந்தையில் முதலீடு செய்து, பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பயன்களுக்குப் பங்கம் விளைவிப்பதாகவே அமைந்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகின்றனர்.

மே 2 முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு – பண்டிகை எதிரொலி!

புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்தப் போராட்டம் 19 ஆண்டுகளாக நீண்டு வருகிறது. மேலும் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வரை புதிய ஓய்வூதிய திட்டத்தில் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மாநில அரசு ஊழியர்களும், 22 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் பயனாளிகளாக இணைந்துள்ளனர் மேலும் மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆட்சிப் பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆகியும் அதற்கான அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி வசதி இருக்கும். பென்சனுக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பின் நிலையான பென்சன் கிடைக்கும். பென்சனுக்கான செலவை அரசே ஏற்கும். அரசு ஊழியர் பணிக்காலத்தில் இறந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பென்சன் கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

புதிய ஓய்வூதிய திட்டம்: பொது வருங்கால வைப்பு நிதி வசதி கிடையாது. பென்சனுக்காக சம்பளத்தில் மாதம் தோறும் பிடித்தம் செய்யப்படும். பணி ஓய்வு பெற்ற பின் நிலையான பென்சனுக்கு உத்தரவாதம் கிடையாது. பணி ஓய்வு பெற்றபின் பென்சன் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பென்சன் வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!