தமிழ் எடுத்த புது தொழில் முயற்சியில் வெற்றி பெறுவாரா? எதிர்பார்ப்பில் “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ ரிலீஸ் !
விஜய் டிவியில் பல்வேறு கதைக்களத்தில் சீரியல்கள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது, தமிழும் சரஸ்வதியும் தொடர். இந்த தொடரில் தற்போது அதிரடியான பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. சந்திரகலா பல வில்லத்தனங்களை செய்து கதையின் விறுவிறுப்பை தூண்டுகிறார். இந்நிலையில் இந்த தொடரின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது.
தமிழ் வெற்றி பெறுவாரா:
தனித்துவமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஸ்டார் விஜய் எப்போதும் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. ஸ்டார் விஜய் சேனலில் ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன.அந்த வகையில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, ராஜா ராணி போன்ற தொடர்களை போல தமிழும் சரஸ்வதியும் தொடரும் TRP யில் கலக்கி வருகிறது. அதுவும் இந்த ஒரு வாரமாக விறுவிறுப்பான நிலையில் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. புதிய கான்ட்ராக்ட்டை தமிழ் வாங்கி விடுவாரா? அந்த 1000 பீஸ்களை தொழிலாளர்கள் செய்து முடிபார்களா என்ற எதிர்பார்ப்பில் கதை நகர்கிறது. இந்நிலையில் இன்று ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
அதில் தமிழ் சொன்ன திட்டப்படி சரியாக நடந்தால் எல்லாம் கைகூடி வரும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு வேலையை ஆரம்பித்தார்கள். தமிழ் தனக்காக வேலை பார்க்கும் 200 குடும்பங்களை நினைத்து வேண்டினார். கார்த்திக் இத்தனை பேர் இத்தனை கஷ்டங்கள் படுவதற்கு பலனாக இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொள்கிறார். முதல் ஷிஃப்ட் வேலையில் அனைவரும் இறங்கி வேலை செய்தார்கள். அவர்களால் முடிந்த வரை முழு மனதோடு வேலை பார்த்தார்கள். தமிழ் நினைத்ததை விட அதிகமாகவே வேலைகள் முடிந்தது. ஆனாலும் வேலை அதிகமாக இருப்பதால் தொழிலாளர்கள் சோர்வு அடையாமல் இருக்க டீ, காபி ஆகியவற்றை அனைவருக்கும் சரஸ்வதி கொடுத்தார்.
சன் டிவியில் புதிய சீரியலில் கமிட்டான மெட்டி ஒலி “திருமுருகன்” – ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் யாருக்கும் தூக்கம் வராமல் இருக்க நமச்சி பாட்டு போட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த ஷிஃப்ட்க்கு அனைவரும் தயார் ஆனார்கள். ஆனால் அதில் சந்திரகலா 2 லட்சம் பணம் கொடுத்து வேலையை நிறுத்த சொன்னவரும் வந்து இருந்தார். வேலை ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே கரண்ட் போகும் வயரை அவர் துண்டித்து வேலையை நிறுத்திவிட்டார். கரெண்ட் காலையில் தான் வரும் என சொல்லிவிட, தமிழ் எல்லாம் முடிந்து விட்டது என மனம் உடைந்து போனார். இனி அடுத்து என்ன நடக்கும் கரண்ட் வருமா? மீண்டும் வேலை நடக்குமா? தமிழ் இந்த டெஸ்டில் ஜெயிப்பாரா? என்ற பலவிதமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.