தனத்தின் குழந்தை இறந்தது தெரிந்து நொறுங்கிப்போகும் மூர்த்தி – உண்மையை உடைப்பாரா ஜீவா??
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தெலுங்கில் ‘வதினம்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இந்நிலையில் அந்த எபிசோடுகள் அனைத்தும் பரபரப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
வதினம்மா (பாண்டியன் ஸ்டோர்ஸ்):
வதினம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் தனமும், மீனாவும் பிரசவத்திற்காக ஒரே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ளனர். மீனாவின் குழந்தை இறந்ததை தெரிந்து கொண்ட தனம் தன் குழந்தையை மாற்றி வைக்கிறார். இது தம்பிகளுக்கு தெரிய தன் அண்ணியின் தியாகத்தை நினைத்து பூரிப்படைகின்றனர். மேலும் கதிருக்கு இது சரியாக படவில்லை. ஜீவாவிடம் குழந்தையை மாற்றி வைக்க சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
ஜீவாவும் அதுதான் சரி என்று மாற்றிவைக்க போக மீனா சரியான நேரத்தில் கண்முழித்து விடுகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் ஜீவா. வெளியில் தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் மூர்த்தி அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து கொண்டிருக்க கதிருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஜீவாவிற்கு கால் செய்ய விஷயம் கைமீறி போனதை சொல்கிறார்.
அண்ணா பல்கலை இரண்டாக பிரிப்பு? உயர் கல்வித்துறை குழப்பம்!!
மூர்த்தி ஆசையாக குழந்தையை பார்க்க வர குழந்தை இறந்து விட்டதாக சொல்கிறார் தனம். இதனால் அனைவரும் உடைந்து போய் விடுகின்றனர். மேலும் மீனாவிற்கு இது பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லை. மீனாவும், ஜனார்தனனும் அவள் செய்த பாவம் தான் இப்படி ஆகி இருக்கிறது என்று கூறுகின்றனர். மீனாவின் அம்மா இதனால் பதற அதற்கு மீனா திட்டுகிறார். அடுத்ததாக ஜீவா தன் அண்ணனின் நிலையை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.