பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜெயிக்கப்போவது யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!

0
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜெயிக்கப்போவது யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜெயிக்கப்போவது யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜெயிக்கப்போவது யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான பைனல் ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பைனலுக்கு பாலாஜி, நிரூப், தாமரை, ஜுலி, ரம்யா பாண்டியன், அபிராமி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். தற்போது யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது குறித்தான தகவலும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 சீசன்களை கடந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தலத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் 5 சீசன்களில் கலந்து கொண்ட 14 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். அதாவது சினேகன், சுஜா, ஜூலி, ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக களமிறங்கும் புது நடிகை – ரசிகர்கள் ஷாக்!

எப்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சி 1 மணி நேரம் மட்டுமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். ஆனால் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் மக்கள் பார்க்கும் வண்ணம் நேரலையாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் பார்க்க இயலாதவர்களுக்கும் வழிவகை செய்யும் பொருட்டு ஒரு மணி நேர தொகுப்பாக அதுவும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தலத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கடந்த பிக் பாஸ் 5 சீசன்கள் அளவுக்கு பிக் பாஸ் அல்டிமேட்டை மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கவில்லை. இதற்கிடையே சுரேஷ் தாத்தா, தீனா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

எழிலின் முதல் திரைப்படம் ரிலீஸ் ஆகாதா? ‘பாக்கியலட்சுமி’ அதிரடி ப்ரோமோ! ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிவடைய போகிறது. அதாவது ஏப்ரல் 10ம் தேதி பைனல் நடத்தலாம் என முடிவு செய்துள்ளனர். பாலாஜி, நிரூப், தாமரை, ஜுலி, ரம்யா பாண்டியன், அபிராமி ஆகியோர் பைனலுக்கு தேர்வாகியுள்ள நிலையில் யார் ஜெயிப்பார்கள் என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு வாரமும் பாலாஜி முருகதாஸ் தான் அதிக அளவில் ஓட்டு வாங்கி கொண்டிருப்பதால் பாலாஜி தான் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!