எழிலின் முதல் திரைப்படம் ரிலீஸ் ஆகாதா? ‘பாக்கியலட்சுமி’ அதிரடி ப்ரோமோ! ரசிகர்கள் அதிர்ச்சி!
எழில் அவரது முதல் திரைப்படத்திற்காக தான் இரவும் பகலும் வேலை செய்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், எழிலின் திரைப்படம் வெளியாக போவதில்லை என கூறும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவை கோபி விவாகரத்து செய்துவிடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே எழிலுக்கு கோபியின் மீது சந்தேகம் இருக்கிறது. பாக்கியாவை கோபி ஏமாற்றி கொண்டிருக்கிறார் என எல்லாமே எழிலுக்கு தெரியும். தற்போது கூட கோபி வேறொரு பெண்ணுடன் சென்றதை எழில் பார்த்துவிட்டார்.
விஜய் டிவி விருதுடன் ‘பாக்கியலட்சுமி’ கோபி சதீஷ் செய்த காரியம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஆனால் கோபி விவாகரத்து அளவுக்கு செல்வார் என்பது எழிலுக்கு தெரியாது. கோபி இல்லையென்றாலும் கூட பாக்கியாவை எழிலால் கவனித்துக்கொள்ள முடியும். இந்நிலையில் ஒரு புறம் எழில் திரைப்பட வேளையில் பிஸியாக இருக்கிறார். திரைப்பட விழாவின் போது பாக்கியாவையும் அழைத்து செல்கிறார். அனைவரின் முன்னிலையிலும் எனது அம்மாவால் மட்டுமே இவ்வளவு தூரம் வளர்ந்து வந்தேன். என் வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க எனது அம்மா தான் காரணம் என கூறுகிறார்.
பாக்கியாவும் தனக்கு இப்படி ஒரு மகன் இருக்கிறான் என நினைத்து பெருமிதம் கொள்கிறாள். இந்நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அதாவது எழிலின் திரைப்படம் வெளியாகாது என அறிவித்துவிட்டனர். மிக பெரிய அளவில் வெற்றி பெரும் என நினைத்த நேரத்தில் நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. எழில் தோத்துவிட்டதும் கோபிக்கு முகத்தில் புன்னகை மலர்கிறது. இந்நேரத்தில் பாக்கியாவினை கோபி விட்டு சென்றால் எழில் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.