விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக களமிறங்கும் புது நடிகை – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இந்த வாரம் முழுவதும் கதிர் முல்லை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலகி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக புது நடிகை களமிறங்கி இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. முல்லை குழந்தை இல்லாமல் கஷ்டத்தில் இருக்க மருத்துவ பரிசோதனையில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என வந்துள்ளது. அதனால் குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர். மேலும் முல்லைக்கு மருத்துவம் செய்து குழந்தை பிறக்க வழி செய்ய முடிவு செய்கின்றனர். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதால் குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர்.
எழிலின் முதல் திரைப்படம் ரிலீஸ் ஆகாதா? ‘பாக்கியலட்சுமி’ அதிரடி ப்ரோமோ! ரசிகர்கள் அதிர்ச்சி!
புது வீடு கட்டும் திட்டத்தையும் அதற்காக கைவிட்டு இருக்கின்றனர். அதனால் வீட்டில் பல பிரச்சனைகள் வருகிறது. இந்நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஒரு பேட்டியில் அவர் சினிமா வாய்ப்புகள் வந்தால் சீரியலில் இருந்து விலகுவேன் என சொல்லி இருந்தார். தற்போது கதிரின் முல்லையாக நடிகை தேஜஸ்வினி நடிக்க இருக்கிறார்.
கதிர் முல்லை ஜோடியும் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். முதலில் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்தார். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் காவ்யா தான் முல்லையாக நடித்து வருகிறார். தற்போது காவ்யாவும் மாற்றப்பட இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தேஜஸ்வினி தன்னுடைய நடிப்பு திறமையால் பலரது மனதை கவருவார் என்பதில் சந்தேகம் இல்லை.