தமிழகத்தில் 6 டூ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் எப்போது? பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

0
தமிழகத்தில் 6 டூ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் எப்போது? பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் 6 டூ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் எப்போது? பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகளில் 2022- 2023 ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வழக்கம் போல் ஜூன் மாதத்தில் தொடங்கி உள்ளன. இந்நிலையில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா எதிரொலியால் பள்ளிகள் கடந்த 2 வருடங்களாக சரியாக திறக்கப்படவில்லை, மேலும் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் பிப்ரவரி 1 முதல் சுழற்சி முறையில் அல்லாமல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2021-22ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு கடந்த மே மாதம் முடிவுற்ற நிலையில், கோடை விடுமுறை மாணவ-மாணவிகளுக்கு விடப்பட்டது. ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இதை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அனைத்து ஆண்கள் & பெண்கள் பள்ளிகளை கலைக்க உத்தரவு – அரசின் திடீர் அறிவிப்பு!

குறிப்பாக, இந்த சூழலுக்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12 ஆம் தேதி வரையிலும், 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையும் பருவ தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!