அனைத்து ஆண்கள் & பெண்கள் பள்ளிகளை கலைக்க உத்தரவு – அரசின் திடீர் அறிவிப்பு!

0
அனைத்து ஆண்கள் & பெண்கள் பள்ளிகளை கலைக்க உத்தரவு - அரசின் திடீர் அறிவிப்பு!
அனைத்து ஆண்கள் & பெண்கள் பள்ளிகளை கலைக்க உத்தரவு - அரசின் திடீர் அறிவிப்பு!
அனைத்து ஆண்கள் & பெண்கள் பள்ளிகளை கலைக்க உத்தரவு – அரசின் திடீர் அறிவிப்பு!

தனித்தனியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்காக செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளை கலைத்துவிட்டு கலப்பு பள்ளிகளாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்கள் & பெண்கள் பள்ளிகள்:

பண்டைய காலகட்டத்தில் தான் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பேசக்கூடாது, ஒன்றாக பழக கூடாது என்று பிரித்து வைத்திருந்தனர். மேலும், பெண்கள் சௌகரியமாக உணர வேண்டும் என்பதற்காக பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர், நாளைடைவில் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான் பெண்குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர்களும் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். இதனால், பெண்களும் ஆண்களும் பேச வாய்ப்பே கிடைக்காமல் ஒன்றாக பழகாமல் பல குற்ற சம்பவங்களும் நடைபெற காரணமாக அமைகிறது

Exams Daily Mobile App Download

ஆனாலும், குழந்தைகளை வளர்க்கும் போதே பாலின வேறுபாடுகள் காட்டாமல் ஒரே மாதிரியாக தான் வளர்க்க வேண்டும் என அறிவுரைகள் கூறினாலும் ஆண், பெண் என்கிற பாகுபாடு இருக்கத் தான் செய்கிறது. கேரளாவில் 280 பெண் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இந்த பாகுபாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படக்கூடாது எனவும், அடுத்த கல்வியாண்டில் இருந்து ஆண்களும், பெண்களும் ஒன்றாக கல்வி கற்கும்படியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் அதிவேகத்தில் பரவும் கொரோனா – 21,880 பேருக்கு தொற்று உறுதி!

மேலும், தற்போது தனித்தனியாக செயல்பட்டு வரும் ஆண், பெண் பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்றி உடனடியாக இணைக்கல்வியை அமல்படுத்த வேண்டும் என கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த பள்ளிகளில் ஆண், பெண் மாணவர்களுக்கான கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் எனவும், இணைக்கல்வியின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் இணைக்கல்வியை தொடங்குவதற்கான வேலைப்பாடுகளை 90 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!