10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத விதமாக தொலைந்து போக வாய்ப்புள்ளது இல்லையெனில் ஏதேனும் சில காரணங்களால் அதற்கு பாதிப்பு ஏற்படவும் கூடும் இத்தகைய சூழ்நிலையில் நாம் என்ன செய்வது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
மதிப்பெண் சான்றிதழ்:
ஒரு நபருக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழ் மிக முக்கிய ஒன்றாக உள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கும், வேலைகளுக்கும் இந்த சான்றிதழ் மிக அவசியமாகிறது. நாம் முக்கிய வேலைகளுக்கு செல்லும் போது இந்த சான்றிதழ்களை கைகளில் கொண்டு செல்கிறோம். அனைத்து நேரங்களிலும் பயன்படுத்துவதால் எதிர்பாராத விதமாக இதனை நாம் தொலைக்க நேரிடலாம். இல்லையெனில் தீ விபத்து,வெள்ளம், கரையான் போன்றவற்றால் கூட சான்றிதழ்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இது போன்ற சூழலில் நாம் பயப்பட தேவையில்லை மீண்டும் எளிதாக பெறலாம்.
அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் சேவைகள்!
அதாவது முதலில் சான்றிதழ் தொலைந்து போன நபர் அவர் வாழும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். பிறகு சான்றிதழ்கள் தொலைந்து போனது குறித்து நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும். மேலும் சான்றிதழைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல் துறையிடம் ஒரு சான்றிதழைப் பெற வேண்டும். பிறகு தாசில்தாரிடம் காவல்துறையிடம் பெற்ற சான்றிதழைக் கொடுத்து சான்றிதழ் தொலைந்ததை உறுதிபடுத்த வேண்டும்.
TNUSRB SI தேர்வுக்கு காத்திருப்போரா? – உங்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு…!
அதுமட்டுமில்லாமல் நகல் சான்றிதழ் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரைவோலை வாங்க வேண்டும். எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு நகல் சான்றிதழ்கள் பெறுவதற்கான விண்ணப்ப மனுவை அனுப்ப வேண்டும். விண்ணப்ப மனுவை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து, மாநில அரசுத்துறை இயக்குநருக்கு நகல் மதிப்பெண் சான்றிதழ் தாசில்தார் சிபாரிசு செய்வார். தொலைந்து போன மதிப்பெண் சான்றிதழ்களுக்கான மாற்றுச் சான்றிதழ்களை எந்தப் பள்ளியில் படித்து முடித்தோமோ அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற முடியும்.