11 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!!
மேற்கு வங்க மாநிலத்திலும் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்றி தேர்ச்சி:
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய அளவில் நடைபெற இருந்த பல முக்கிய நுழைவு, பல்கலை தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக பல கல்வி வாரியங்களும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாநில அரசு வெளியீடு!
ஒரு சில மாநிலங்களில் ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பல மாநிலங்களிலும் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறைப்படி மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்களை சிரமபடுத்த கூடாது என்ற நோக்கிலும், நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் திட்டமிட்ட தேதிகளில் நடைபெறும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வுகள் நடத்தப்படும். நண்பகல் 12 மணிக்கு தேர்வுகள் தொடங்கி பிற்பகல் 3:15 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.