12ஆம் வகுப்பு மாணவர்கள் செல்போன் வாங்க ரூ.10 ஆயிரம் – மாநில அரசு அறிவிப்பு!!
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக கல்வி கற்கும் நோக்கில் பள்ளி மாணவர்கள் செல்போன் வாங்குவதற்கு ரூபாய் 10,000 அவர்களது வங்கிக்கணக்கில் அரசு செலுத்தும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.
மாணவர்களுக்கு செல்போன்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பல தளர்வுகளுக்கு பின் சில மாநிலங்களில் பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு வருவதில்லை. இதனால் பள்ளிகளும் ஆன்லைன் வழி கல்வியை ஆதரிக்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்று வருகின்றனர். ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவ்வாறு செய்ய வாய்ப்பு இல்லை. இந்த நிலையை மாற்றுவதற்கு மேற்கு வங்க அரசு புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.
‘உயர்கல்வி உதவித்தொகை பெற பட்டியலின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்’ – தமிழக அரசு
இதன்படி கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் செல்போன் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த குறுகிய காலகட்டத்தில் 9.5 லட்சம் பேருக்கும் செல்போன் குறைந்த விலையில் தயாரிக்க வாய்ப்பில்லை எனவே தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் வங்கிக்கணக்கில் ரூ.10,000 வழங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |