‘உயர்கல்வி உதவித்தொகை பெற பட்டியலின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்’ – தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் நடப்பு கல்வி ஆண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான கடைசி தேதி பிப்ரவரி 1 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்கள் தமிழக அரசு சார்பாக அளிக்கப்படும் உதவிதொகையை பெறலாம். ஆனால் பகுதி நேர மாணவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை பெற மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
மேலும் விண்ணப்பதாரர் முதுகலை பட்டப்படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1,200 விண்ணப்பங்களுக்கு மேல் வந்தால் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட படிப்பு கால அளவிற்கு மட்டும் உதிவித்தொகை அளிக்கப்படும்.இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 1-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இதற்கான விண்ணப்பங்களை
எஸ்.சி மாணவர்கள், ஆணையர்.
ஆதிதிராவிடர் நலத்துறை,
சேப்பாக்கம்,
சென்னை-600006′ என்ற முகவரிக்கும்,
எஸ்.டி மாணவர்கள்,
இயக்குனர்,
பழங்குடியினர் நலத்துறை,
சேப்பாக்கம்,
சென்னை-600006 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் .
முழு விவரங்களை அறிய https://cms.tn.gov.in/sites/default/files/forms/ph.D_application_form_2020_2021_0.pdf தெரிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |