தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க குறைந்த கால அவகாசமே உள்ளதால் வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை தமிழக தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான மாணவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டிய சூழல் மற்றும் செயல்முறை தேர்வுகள் பயிற்சி போன்ற காரணங்களுக்காக முதல் கட்டமாக 10 மற்றும் 12 ம் வகுப்புக்கு ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
புதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை – பதிவிறக்கம் செய்வது எப்படி??
தேர்வு அட்டவணை:
அடுத்த கட்டமாக 9 மற்றும் 11ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. இதனால் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மே 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்க உள்ளது. அடுத்ததாக 10 மற்றும் 11ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை மட்டுமே பள்ளிகளில் வகுப்புகள் எடுக்க முடியும். இதனால் வாரத்தில் ஆறு நாட்களும் விடுமுறை இல்லாமல் பள்ளிகளை நடத்த வேண்டும். மேலும், நேரடி வகுப்புகள் நடக்கும் போதே மாணவர்களுக்கு செயல்முறைத் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்