தெற்கு ரயில்வே ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.
எச்சரிக்கை அறிவிப்பு:
ரயிலில் பயணிகளின் பாதுகாப்புக்காக அபாய சங்கிலி பொருத்தப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு பிரச்சனை எதிர்கொள்ளும்போது ரயில் ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த சங்கிலிகள் பயன்படுகின்றன. ஆனால் இதை தவறாக பயன்படுத்தி இதுவரை ரூபாய் 15.45 லட்சம் அபராதம் வாங்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
RCFL Director வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
அதாவது ஒரு நாளைக்கு தினசரி 133 விரைவில் 640 புகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் சுமார் 22 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதில் 2023-24 நிதியாண்டில் தவறுதலாகவும், உரிய காரணம் இன்றியும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 2632 வழக்குகளில் 2618 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 லட்சத்து 45 ஆயிரத்து 165 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் தேவையின்றி பயணிகள் எச்சரிக்கை சங்கிலியை பயன்படுத்த வேண்டாம் என தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.