TNPSC Tamil Ilakkanam Versollil Irunthu Vinaimutru Arithal Study Materials – Free PDF Download
TNPSC தமிழ் தகுதித்தேர்வு – வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல்:
- “வினைமுற்று” அல்லது “முற்று வினை” என்பது ஒரு செயலை முழுமையாகக் குறிக்கும் வினைச்சொல் எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பாடுகிறான், எழுதினான், ஆடினான் ஆகிய சொற்களில் வினையானது முழுமை பெற்றுள்ளது.
- வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
- பொதுவாக, வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
தெரிநிலை வினைமுற்று:
- ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம் , செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை, ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
- எடுத்துக்காட்டாக, மாணவி கட்டுரை எழுதினாள்.
செய்பவர் – மாணவி
காலம் – இறந்தகாலம்
கருவி – தாலும் எழுதுகோலும்
செய்பொருள் – கட்டுரை
நிலம் – பள்ளி
செயல் – எழுதுதல்
குறிப்பு வினைமுற்று:
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்டையாகக் காட்டாது, செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, “குறிப்பு வினைமுற்று” எனப்படும்.
- பொருள் – அவன் பொன்னன் – பொன்னை உடையவன்
- சினை – அவன் கண்ணன் – கண்களை உடையவன்
- இடம் – அவன் தென்னாட்டவர் – தென்னாட்டில் வாழ்பவன்
- பண்பு – அவன் கரியன் – கருமை நிறத்தவன்
- காலம் – சித்திரையன் – சித்திரையில் பிறந்தவன்
- தொழில் – அவன் எழுத்தன் – எழுதுபவன்
வேர்ச்சொல்:
- ஒரு சொல்லின் அடிப்படையான, பிரிக்க முடியாத பகுதிதான் “வேர்ச்சொல்” என அழைக்கப்படுகிறது.
- மேலும், வேர்ச்சொல் இல்லாமல் ஒரு சொல்லை உருவாக்க முடியாது.
- எடுத்துக்காட்டாக, வளையல் என்னும் சொல்லானது வளைய, வளை என்ற வேர்ச்சொல்லை அடிப்படையாக கொண்டு உருவானது.
வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்றை அறிதல்:
| வேர்ச்சொல் | வினைமுற்று |
| அடி | அடித்தார் |
| பார் | பார்த்தான் |
| தா | தருவார் |
| மலர் | மலர்ந்தது |
| செய் | செய்தான் |
| கத்து | கத்தினான் |
| எழு | எழுந்தார் |
| தடு | தடுத்தான் |
| வா | வந்தான் |
| விடு | விடுவித்தான் |
| வேய் | வேய்ந்தான் |
| வை | வைத்தான் |
| வரை | வரைந்தான் |
| படி | படித்தாள் |
| கூடி | கூடினார்கள் |
| கல | கலந்தார் |
| கொடு | கொடுத்தான் |
| கல் | கற்றான் |
| தொடு | தொட்டது |
| வீழ் | வீழ்ந்தான் |
| தா | தந்தார் |
| காண் | கண்டான் |
| உடை | உடைத்தார் |
| ஓடு | ஓடியது |
| எழுது | எழுதினார் |
| உழு | உழுதார் |
| அஞ்சு | அஞ்சினான் |
| பூண் | பூண்டார் |
| நறுக்கு | நறுக்கியது |
| பேசு | பேசினார் |
| வில் | விற்றான் |
| நோக்கு | நோக்கினான் |
| இயம்பு | இயம்பியது |
| கொடு | கொடுத்தான் |
| படு | படுத்தார் |
| நடி | நடித்தது |
| பெறு | பெற்றான் |
| உண் | உண்டான் |
| செல் | சென்றார் |
| வீழ் | வீழ்ந்தான் |
| காண் | கண்டான் |
| தேர் | தேர்ந்தார் |
| தின் | தின்றது |
| குடி | குடித்தான் |
| அறு | அறுத்தான் |
| பறி | பறித்தான் |
| ஓடு | ஓடியது |
| வெட்டு | வெட்டினான் |
| அரி | அரிந்தார் |
| கொய் | கொய்தது |
| பிள | பிளந்தான் |
| பாய்ச்சு | பாய்ச்சினார் |
| குத்து | குத்தினார் |
| எய் | எய்தான் |
| வரை | வரைந்தான் |
| கிழி | கிழித்தது |
| தா | தருவான் |
| பற | பறந்தது |
| எழுது | எழுதினார் |
| இயற்று | இயற்றுனர் |
| அடி | அடித்தார் |
| பூசு | பூசினார் |
| எடு | எடுத்தவன் |
| கொடு | கொடுத்தான், கொடுத்தாள் |
| நில் | நின்றவன் |
| இகழ் | இகழ்வார் |
| செல் | சென்றவன் |
| வை | வைத்தல் |
| காண் | கண்டாள், கண்டான் |
| வா | வருகின்றனன் |
| உழு | உழுதார் |
| படி | படித்தவன் |
| சுடு | சுடுதல் |
| கல் | கற்றவன் |
| மகிழ் | மகிழ்ந்தவன் |
| கட்டு | கட்டுவான், கட்டினாள் |
| உறங்கு | உறங்கினான் |
| ஓடு | ஓடினான், ஓடினாள் |
| சிரி | சிரித்தவள் |
| அழு | அழுதவன் |
| தா | தருகிறான் |
| தேர்ந்த | தேர்ந்தார் |
| பாய்ச்சு | பாய்ச்சினார் |
| பிள | பிளந்தான் |
| கூறு | கூறினான் |



























Super