தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மயங்கி விழுந்த நடிகை – சபதத்தை முடிப்பாரா? மாட்டாரா? திடீர் திருப்பம்!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சமீபமாக சரஸ்வதி எடுத்த சபதத்துக்காக படிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் தேர்வறையில் நடந்த நிகழ்வு பார்வையாளர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
தமிழும் சரஸ்வதியும்:
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் எப்பொழுதும் ஹிட் கொடுத்து வரும் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் இடையே ஆதரவை பெற்று வருகிறது. இதில் தொகுப்பாளர்களாகிய தீபக் ஹீரோவாகவும், நட்சத்ரா ஹீரோயின் ரோலில் நடித்து வருகிறார்கள். தன் படிக்காத மகனுக்கு படித்த பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் பட்ட தமிழின் அம்மாவுக்கு இருவருக்கு இடையில் மலர்ந்த காதலை மறைந்து, கோதை அம்மாளிடம் சரஸ்வதி எம்.பி.ஏ. படித்துள்ளதாக பொய் சொல்லி திருமணம் நடத்தப்பட்டது.
ஆலியாவின் 2வது குழந்தைக்காக சொகுசு கார் வாங்கிக் கொடுத்த சஞ்சீவ் – குவியும் விமர்சனங்கள்!
உண்மையாகவே சரஸ்வதி 12 வது கூட தேர்ச்சி பெறாதவர். இந்த உண்மையை அறிந்த கோதை அன்றே தனது நிறுவனத்தில் ஜி எம் ஆக இருந்த தன் மகன் தமிழின் பதவி பறிக்கப்பட்டு அதே நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சூழல் உண்டாகிறது. மேலும் இந்த அதிர்ச்சியை கேட்டு தாங்கிக் கொள்ளாத கோதை அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இப்படி ஒரு பொய் சொன்னதால் மொத்த குடும்பத்துக்கும் தமிழ் மற்றும் சரஸ்வதி மீது அப்படி ஒரு வெறுப்பு.
அதே நேரம், கோதை அம்மா, தமிழ் – சரஸ்வதியை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். ஆனாலும் சரஸ்வதி தன்னால் தானே கணவருக்கு இந்த நிலைமை என்ற குற்ற உணர்ச்சியால் தமிழின் தம்பி கார்த்திக்கை சந்தித்து பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரஸ்வதி சபதமாக கார்த்திக்கிடம் நான் +2 பாஸ் பெறுவேன் என்று சபதத்தை கூறி மேலும், பாஸ் செய்தவுடன் தமிழுக்கு மீண்டும் அந்த பதவியை அளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ளன ப்ரோமோவில் முதல் கட்ட முயற்சியாக சரஸ்வதி படித்து முதல் தேர்வுக்காக கிளம்பிக்கொண்டிருந்தார்,
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.89890/- || கல்வி தகுதி: டிகிரி
அதை பிடிக்காத சந்திரலேகா, தமிழ் கொடுத்த மாத்திரைகளோடு தூக்க மாத்திரையை கலந்து விடுகிறார். அதை சாப்பிட்டு விட்டு சரஸ்வதி தேர்வு எழுத செல்கிறார். அப்போது தேர்வு அறையில் சரஸ்வதி எவ்வளவு முயன்றும் தேர்வு எழுத முடியாமல் மயங்கி விழுகிறார். இதுபற்றி தகவலறிந்து வந்த தமிழும்,சரஸ்வதியின் அப்பாவும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதிலிருந்து சரஸ்வதி தேர்வை முழுவதும் எழுதுவாரா ? மாமியார் மனதில் இடம் பிடிப்பாரா ? என்ற பல எதிர்பார்ப்புடன் தற்போது வெளியாகியுள்ள சீரியல் ப்ரோமோ அமைந்துள்ளது.