‘ஆலியா மருமகளா வந்தது நாங்கள் செய்த தவம்’ – மாமியார் ஓபன் டாக்! வைரலாகும் வீடியோ!
தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ள ஆலியா குறித்து, ஆலியாவின் மாமியார் பல விஷயங்கள் கூறியுள்ளார். ஆலியா எனக்கு மருமகளா கிடைச்சதுக்கு நான் மிகவும் குடுத்து வைச்சிருக்கணும் என ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆலியாவின் மாமியார்:
விஜய் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நாயகனாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆலியா தனது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். ஞாயிற்றுக்கிழமை தான் அழகிய ஆண் குழந்தையை ஆலியா பெற்றெடுத்தார்.
ஆலியாவின் 2வது குழந்தையும் ஆப்ரேஷன் மூலமாக தான் பிறந்ததா? அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
மருத்துவனையில் இருந்து வெளியே வந்ததும் தந்தையின் முகத்தை குழந்தை முதன் முறையாக பார்க்கும் தருணத்தை படம் பிடித்து சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது ஆலியா குறித்து ஆலியாவின் மாமியார் கூறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இப்படி ஒரு தைரியமான பெண்ணா என ஆலியாவை பார்த்து வியந்திருக்கிறேன். ஷூட்டிங் முடிந்து இரவு வீட்டிற்கு வந்தாலும் கூட கொஞ்சம் கூட முகத்தில் கோவத்தை காட்டாமல் சிரித்தபடியே அனைத்து வேலைகளையும் செய்வாள். ஆலியா தான் எனக்கு மருமகள்.
பொதுவாக திருமணமாகி வந்த பெண்கள் அனைவருமே கணவருடன் தனிக்குடித்தனம் போக தான் ஆசைப்படுவார்கள் மற்றும் கணவருடன் தனியாக நேரத்தை செலவிட வேண்டும், ஹோட்டல் சென்று உணவருத்திவிட்டு கணவருடன் தனியாக பேச வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஆலியா கடந்த இரண்டு வருடத்தில் ஒரு தடவை கூட சஞ்சீவை மட்டும் வெளியே அழைத்து சென்றதில்லை. எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துக்கொண்டு தான் செல்வார் என ஆலியாவை பற்றி பல விஷயங்கள் கூறியுள்ளார்.