Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம், NPS கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே!

0
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம், NPS கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம், NPS கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம், NPS கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே!

சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) , பிபிஎஃப் (PPF ), நேஷனல் பென்சன் ஸ்கீம் (NPS) ஆகிய திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சத் தொகையை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள், இந்த கணக்குகளின் மினிமம் பேலன்ஸ் தொகையை புதுப்பித்து இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் கணக்கை செயல்பாட்டில் வைத்திருக்கலாம்.

முக்கிய அப்டேட்:

நடப்பு வருட புதிய நிதி ஆண்டு தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மேலும் மார்ச் 31க்குள் அலுவலகங்களில் முடிக்க வேண்டிய கணக்குகள் முடிக்கப்பட்டு வருகிறது. சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த பொதுமக்கள் அதிகமான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வங்கிகளில் சேமிப்பு கணக்கு, எஃப்டி திட்டங்களுக்கு தரும் வட்டியை விட போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு நல்ல வட்டி மற்றும் லாபம் கிடைக்கிறது. அதை கருத்தில் கொண்டு நீங்கள் இந்த 3 திட்டத்தில் முதலீட்டை தொடங்கி இருந்தால் இன்னும் 2 நாட்களில் அதாவது மார்ச் 31க்குள் ஒரு முக்கியமான அப்டேட்டை செய்ய வேண்டும்.

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரத்து செய்யப்பட்ட கார்டை ஆக்டிவேட் செய்யும் முறைகள்!

நடப்பு நிதியாண்டில் இந்தக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் தொகையை இதுவரையிலும் டெபாசிட் செய்யவில்லை என்றால் இன்னும் 2 நாட்களில் இந்த 3 திட்டங்களில் இந்த தொகையை தெரிந்து கொண்டு மார்ச் 31, 2022க்குள், டெபாசிட் செய்ய வேண்டும் இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒருவேளை இந்த முதலீடு கணக்குகள் செயலிழக்கப்பட்டால், அவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

1. SSY (சுகன்யா சம்ரிதி யோஜனா)

இந்த திட்டத்தில், ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம். பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான இதில் வழங்கப்படும் வட்டி, 7.6% பிரிவு 80C-ன் கீழ் வரிச்சலுகை கிடைக்கும்.எனவே வரும் மார்ச் 31ம் தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்த வேண்டும் என போஸ்ட் ஆபீஸ் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

2. PPF ( பொது வருங்கால வைப்பு நிதி)

இந்த திட்டத்தில், ஒவ்வொரு நிதியாண்டிலும் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 500 ஆகும். இதுவரை PPF கணக்கில் குறைந்தபட்ச தொகை இதுவரை செலுத்தவில்லை என்றால் 500 ரூபாய் செலுத்துங்கள். இதை ஆன்லைனில் செய்யலாம் அல்லது தொகையை டெபாசிட் செய்ய கிளைக்கு நேரில் செல்ல வேண்டும்.

3. NPS (தேசிய ஓய்வூதிய திட்டம்)

பங்களிப்பிற்கான குறைந்தபட்ச தொகை ரூ. 500. ஆகும். அதே நேரம், இந்த கணக்கை செயலில் வைத்திருக்க, நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ1,000 முதலீடு செய்ய வேண்டும். இதில் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்யத் தவறினால், அபராதம் விதிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!