மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – 11% அகவிலைப்படி (DA) உயர்வு! முழு விவரம் இதோ!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு - 11% அகவிலைப்படி (DA) உயர்வு! முழு விவரம் இதோ!
மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு - 11% அகவிலைப்படி (DA) உயர்வு! முழு விவரம் இதோ!
மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – 11% அகவிலைப்படி (DA) உயர்வு! முழு விவரம் இதோ!

வரவிருக்கும் ஏப்ரல் மாத சம்பளத்துடன் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றுள்ளது.

DA உயர்வு

பல மாதங்களாக அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் இன்னும் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து வருகின்றனர். இந்த வேளையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு 11 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சமீபத்தில் அறிவித்தார். இது குறித்து சௌஹானின் கூற்றுப்படி, ‘மத்தியப் பிரதேச மாநில நிர்வாகம், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 31% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம், NPS கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே!

இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கு முன்பு, மாநில அரசாங்க ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 20% ஆக இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 7 லட்சம் ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மத்தியப் பிரதேச அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்புகளை பெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக கொரோனா வைரஸ் காரணமாக மாநில அரசு ஊழியர்களின் டிஏவை அரசால் உயர்த்த முடியவில்லை என்று சவுகான் கூறி இருந்தார். இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பின், ஏப்ரலில் பணம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்காக ‘லாட்லி லக்ஷ்மி திட்டத்தின்’ கீழ் வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட்டு 25,000 ரூபாயாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 34% DA உயர்வை மோடி அரசாங்கம் விரைவில் அறிவிக்கக்கூடும் என்று பல ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் உயர்த்தப்படும். இப்போது மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த DA தொகை தற்போது, 31 சதவீதமாக உள்ளது. இத்தொகை 34% ஆக உயர்த்தப்பட்டால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!