ஆலியாவின் 2வது குழந்தையும் ஆப்ரேஷன் மூலமாக தான் பிறந்ததா? அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
ஆலியாவின் முதல் குழந்தையான ஐலா பாப்பாவை ஆப்ரேஷன் மூலமாக தான் பெற்றெடுத்தார். தற்போது இரண்டாவதாக பிறந்துள்ள ஆண்குழந்தை ஆப்ரேஷன் மூலமாக பிறந்ததா அல்லது நார்மல் டெலிவரியா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆலியா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
ஆலியாவின் இரண்டாவது குழந்தை:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். ஏற்கனவே ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம், ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் என அனைத்தையுமே குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே இருவரும் முடிவுசெய்து வைத்துவிட்டனர்.
மணக்கோலத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4 கேபிரியலா – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்ததுமே முதன் முறையாக சஞ்சீவ் குழந்தையை பார்க்கும் அழகிய தருணத்தை படம் பிடித்து சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். பல சீரியல் பிரபலங்களும் அந்த பதிவினை பார்த்துவிட்டு ஆலியாவிற்கும் சஞ்சீவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் ஆலியாவின் இரண்டாவது குழந்தை normal பிரசவமா அல்லது SURGERY ஆ என கேள்வி எழுந்துள்ளது. முதல் குழந்தை எந்த பிரசவத்தில் பிறந்தது என ஆலியாவிடம் முன்பாகவே கேட்கப்பட்டது.
ஐலா பாப்பாவின் தலை திரும்பாத காரணத்தினால் SURGERY செய்து மட்டுமே ஐலா பாப்பாவை எடுத்தோம் என கூறியுள்ளார். SURGERY முறையில் குழந்தை பிறந்தால் வயிற்றில் உள்ள 5 லேயரை கிழித்து தான் குழந்தையை எடுக்க வேண்டும். மீண்டும் கர்ப்பமாகும் போது normal பிரசவமாக இருந்தால் அந்த லேயரில் போடப்பட்ட தையல் பிரிய அதிக வாய்ப்புள்ளது. இதனால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படவும் வாய்ப்புண்டு. இதனால் ஆலியாவின் இரண்டாவது குழந்தையும் SURGERY மூலமாகவே பிறந்திருக்கும் என யூகிக்கப்படுகிறது.