விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் “சிப்பிக்குள் முத்து” சீரியல் – வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சின்னத்திரையில் தமிழ் சீரியல்களுக்கு தனி வரவேற்பு உள்ள நிலையில், விஜய் டிவியில் மக்களை கவரும் வகையில் புதிய சீரியல் ஒன்று விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
புதிய சீரியல்:
சினிமாவை விட சீரியல் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல்கள் என்றாலே தனி மரியாதை இருக்கிறது. மேலும் ஒவ்வொரு சீரியலும் புது கதையுடன் ஒளிபரப்பாகி வருவதால் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் கூட நல்ல TRPயில் இருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட “வைதேகி காத்திருந்தாள்” சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது.
அதனால் அவரது சீரியலில் நடித்த கதாபாத்திரங்கள் கூட வருத்தத்தில் இருக்கின்றனர். அந்த சீரியல் TRPயில் வீழ்ச்சி அடைந்ததால் திடீரென நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் புதிய சீரியல் தொடங்கப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக புதிய சீரியல் ஒன்று தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த சீரியலுக்கு ‘சிப்பிக்குள் முத்து’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசாவிற்கு 2வது பிரசவம் – ஆணா? பெண்ணா? ரசிகர்கள் வாழ்த்து!
சினிமா படங்களின் பெயர்களை வைத்து ஒளிபரப்பான சீரியல்கள் என்றாலே அது ஹிட்டாக வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் தற்போது ‘சிப்பிக்குள் முத்து’ என பெயர் வைக்கப்பட்ட சீரியல் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீரியல் அந்த படத்தை போலவே விதவையை திருமணம் செய்ய முடிவெடுக்கும் நபர் பற்றிய கதையாக இருக்குமோ என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த சீரியலில் கதை மற்றும் நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில் அதன் பூஜை ஸ்டில் குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.