ஈஸ்வரியின் முடிவால் அதிர்ந்து போன கோபி, உறைந்து நிற்கும் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ இந்த வார ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் ரசிகர்களை மிகவும் அதிகமாக ஈர்த்து வருகிறது. இந்த வாரத்தில் வர இருக்கும் காட்சிகள் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ஈஸ்வரியின் மாற்றம்:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா எதை செய்தாலும் அதை குறை சொல்லும் வேலையை மட்டுமே செய்து வரும் கதாபாத்திரம் தான் பாக்கியாவின் அத்தை ஈஸ்வரி. தன் மகன் கோபியிடமும், பேரப்பிள்ளைகள் மீது அதிக பாசத்தையும் காட்டும் ஈஸ்வரி எப்போதும் பாக்கியவை திட்டுவதை தான் முழு நேரமும் செய்து வருவார். இதை பாக்கியா எப்போதும் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. தனது பொறுப்புகளை எப்போதும் சரியாக செய்து வருவார்.
‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசாவிற்கு 2வது பிரசவம் – ஆணா? பெண்ணா? ரசிகர்கள் வாழ்த்து!
இப்படி ஒரு சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராமமூர்த்தி தனது அனைத்து சொத்துக்களையும் பேரப்பிள்ளை மீதும், பாக்கியா பெயரிலும் எழுதி வைத்து விடுவார். இதனால் தன் மகனை விட்டு விட்டு மருமகள் பேரில் சொத்தை எழுதி வாய்த்து விட்டதால் பாக்கியா மீது கூடுதல் கோவத்தில் இருந்தார் ஈஸ்வரி. திடீரென்று ராமமூர்த்திக்கு உடல்நலம் சரியில்லாமல் போனார். இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
“பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அரங்கேறிய கோபி, ராதிகா திருமணம்!
வீட்டு செலவிற்கு பாக்கியா பணம் கேட்க, தான் அப்பாவிற்கு மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து விட்டதால், தன்னிடம் பணம் இல்லை என்று கோபி பாக்கியாவிடம் கத்துகிறார். இதனை கேட்ட ஈஸ்வரி தனது நகைகள் அனைத்தையும் எடுத்து வந்து பாக்கியாவிடம் கொடுத்து, நீ வீட்டு செலவிற்கு எவ்வளவு கஷ்டப்படுறன்னு எனக்கு தெரியும், இத வைச்சுக்க என்று கூறி விட்டு கோபியை திரும்பி கூட பார்க்காமல் செல்கிறார். இதை சற்றும் எதிர்பாராத கோபி மற்றும் பாக்கியா இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.