முடிவுக்கு வரும் சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர் 2 & பிரபல சீரியல்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சின்னத்திரையில் பல முன்னணி சேனல்களில் வெற்றிகரமாக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ஒரு சில டாப் சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முடிவுக்கு வரும் சீரியல்கள்:
சின்னத்திரை சீரியல்கள் பல சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் அதில் ஒரு சில சீரியல்கள் தான் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கின்றன. இதனால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை துண்ட புது கதையுடன் பல சீரியல்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் ஏற்கனவே ஒளிபரப்பாக இருக்கும் பல சீரியல்கள் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிறப்பாக நடந்த தாத்தா பிறந்தநாள்,ராதிகா கண்ணில் படாமல் தப்பித்த கோபி – “மகா சங்கமம்” இன்றைய எபிசோட்!
அதன் படி விஜய் டிவியில் முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இதில் கதாநாயகனாக நடிகை மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக தொடக்கத்தில் நடிகை ரட்சிதா மகாலக்ஷ்மி நடித்து வந்த நிலையில் தற்போது நடிகை மோனிஷா கதாநாயகியாக களமிறங்கி இருக்கிறார். சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் சினிமா காட்சிகளை போல எடுக்கப்படும் தென்றல் வந்து என்னை தொட சீரியலும் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியல் மற்றும் ஜீ தமிழ் கலர்ஸ் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.