தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத 1.17 லட்சம் மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து முக்கிய உத்தரவை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா 3வது அலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது, பின்பு வைரஸ் பரவல் குறைய தொடங்கியதால் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனிடையே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். மேலும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவதற்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது.
மே 20 முதல் ஜூன் 16 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசின் அறிவிப்பு!
இதையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்கியது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் 28ஆம் தேதி வரையும் ஏப்ரல் 28 முதல் மே 2ஆம் தேதி வரை இரு கட்டமாக செய்முறை தேர்வுகள் நடைபெறும் என அதிகாரபூர்வமாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, பொதுத்தேர்வும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் சேர்த்து 1.17 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், தேர்வுக்கு இவ்வளவு நபர்கள் விண்ணப்பித்து விட்டு ஏன் தேர்வில் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுந்து உள்ளது. எனவே மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாத காரணங்களை கண்டறிந்து, பள்ளிக் கல்வித்துறைக்கு விரிவான அறிக்கை தர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் அனைவரையும் ஜூலையில் நடத்தப்படும் உடனடி தேர்வில் பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.