சிறப்பாக நடந்த தாத்தா பிறந்தநாள்,ராதிகா கண்ணில் படாமல் தப்பித்த கோபி – “மகா சங்கமம்” இன்றைய எபிசோட்!

0
சிறப்பாக நடந்த தாத்தா பிறந்தநாள்,ராதிகா கண்ணில் படாமல் தப்பித்த கோபி -
சிறப்பாக நடந்த தாத்தா பிறந்தநாள்,ராதிகா கண்ணில் படாமல் தப்பித்த கோபி - "மகா சங்கமம்" இன்றைய எபிசோட்!
சிறப்பாக நடந்த தாத்தா பிறந்தநாள்,ராதிகா கண்ணில் படாமல் தப்பித்த கோபி – “மகா சங்கமம்” இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் சீரியலில், தாத்தாவின் பிறந்தநாள் விழாவை அனைவரும் சந்தோசமாக கொண்டாடுகின்றனர். அப்போது ராதிகா வர கோபி ரூமை விட்டு வெளியே வராமல் இருக்கிறார். பின் கோபியின் இந்த நடவடிக்கையை நினைத்து ராமமூர்த்திக்கு கோவம் வருகிறது.

மகா சங்கமம்:

இன்று மகா சங்கமம் சீரியலில், தாத்தாவின் பிறந்தநாளுக்கு அனைவரும் ஒரே மாதிரி உடை அணிந்து கேக் வெட்ட தயாராக இருக்கின்றனர். அப்போது அமிர்தா தாத்தாவிற்கு பரிசுடன் வருகிறார். தாத்தாவிற்கு பரிசை கொடுக்க செல்ல அப்போது அமிர்தா அடுத்து 100வது பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என சொல்கிறார். பின் அனைவரும் பிறந்தநாளுக்கு தயாராகி இருக்கின்றனர். தாத்தாவிற்கு பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். தாத்தா பாக்கியாவிற்கும் ஈஸ்வரிக்கும் ஊட்டி விடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ராதிகா கார் சத்தம் கேட்க இனியா ராதிகா ஆன்டி வந்துவிட்டதாக சொல்கிறார். அப்போது உஷாராக இருந்த கோபி செழியனிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்லி அவரை அழைத்து கொண்டு வருகிறார். ராதிகாவை பாக்கியா உள்ளே அழைத்து வர அப்போது கோபி மாடிக்கு சென்றுவிடுகிறார். ராதிகா தாத்தாவிற்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். பின் ராதிகாவுக்கு உண்மை எல்லாம் தெரிய வைக்க வேண்டும் என ராமமூர்த்தி நினைக்கிறார். கோபி மாடிக்கு வர செழியன் என்ன முக்கியமான விஷயம் என கேட்கிறார்.

அப்போது கோபி எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது என சொல்கிறார். இப்போவா என கேட்க ஆமாம் என கோபி ரூமிற்கு செல்கிறார். ராமமூர்த்தி இனியாவை அனுப்பி கோபியை அழைத்து வர சொல்கிறார். ஆனால் கோபி வேலை இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். பின் கண்ணன் ஐஸ்வர்யா என மாறி மாறி வந்து கோபியை தொந்தரவு செய்கின்றனர். இறுதியாக பாக்கியா வந்து கூப்பிட இன்னும் 10 நிமிடத்தில் வருகிறேன் என சொல்கிறார். நீண்ட நேரமாக காத்திருந்து ராதிகா நான் கிளம்புகிறேன் என சொல்கிறார். ராதிகா கிளம்ப கோபி மாடியில் இருந்து பார்க்கிறார்.

கண்ணம்மா பாரதியை பாராட்டிய விக்ரம், கண்ணம்மா கண்டுபிடித்த உண்மை – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!

அவர்கள் போனதை உறுதி செய்துவிட்டு பின் கீழே வருகிறார். அப்போது கோபியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கிறது. எழில் பாக்கியாவிடம் ஏன் இப்படி இருக்கிறார் என தெரியாமல் கேட்கிறார். பின் ராமமூர்த்தி கோபியின் இந்த நடவடிக்கையை பார்த்து கோபப்படுகிறார். வெளியே சென்ற கோபி ராதிகாவிற்காக காத்திருக்கிறார். அப்போது ராதிகா வர கோபி உடன் வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் மூர்த்தி போன் பேச வெளியே வருகிறார். மூர்த்தி பேசிவிட்டு திரும்பி பார்க்க கோபி ராதிகா கையை பிடித்துக் கொண்டு நிற்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!