‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா – கலங்கி போன முல்லை!
தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொண்டு சங்கடத்தில் முல்லை இருந்து வரும் வேளையில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது முல்லையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் கூறிவிடுகிறார். முல்லைக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டால் முல்லையால் தாங்கிக்கொள்ள முடியாது என கதிர் இந்த விஷயத்தை முல்லையிடம் இருந்து மறைத்துவிடுகிறார். தனக்கு எப்போது தான் குழந்தை பிறக்கும் என முல்லை மிகவும் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்.
கண்ணம்மாவும், பாரதியும் ஒன்று சேர்வது எப்போது? ஹேமா, லட்சுமி கொடுத்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!
வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி கவலைப்படுகிறார். கதிரும் முல்லைக்கு ஆறுதல் கூறி தேற்றி வந்தார். இந்நிலையில் கதிர் மறைத்து வைத்திருந்த ரிப்போர்ட்டை முல்லை பார்த்து தனக்கு குழந்தை பிறக்காது என்ற அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்கிறார். இனிமேலும், இந்த வீட்டில் இருந்து எந்த பயனும் கிடையாது என கூறி வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். கதிரும் முல்லையை சமாளித்து வீட்டிற்கு மறுபடியும் அழைத்து வருகிறார். எப்படியும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மேற்படி சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்த சமயத்தில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
2வது குழந்தைக்காக ஆல்யா சஞ்சீவ் செய்த காரியம் – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் ஐஸ்வர்யா, தான் கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் தெரிவிக்கிறார். குடும்பத்தினரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு முல்லை தனக்கு மட்டும் தான் குழந்தை இல்லை என ஏக்கமடைகிறார். அனைத்தையும் தாங்கி கொண்டு முல்லை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.