மத்திய அரசில் 8 வது முடித்தவர்க்கு Data Entry Operator வேலை – 350+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்..!
மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (CMPDI) சமீபத்தில் Clerk, Driver, Surveyor, Assistant Driller & Jr. Data Entry Operator போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பதவிகளுக்கு என்று மொத்தமாக 351 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
CMPDI வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Clerk, Driver, Surveyor, Assistant Driller & Jr. Data Entry Operator போன்ற பதவிகளுக்கு என்று மொத்தமாக 351 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 8வது / 10வது / 12வது / ITI / Diploma அல்லது ஏதேனும் ஒரு Graduation டிகிரி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் கல்வித் தகுதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் மிக்கவராக இருப்பது அவசியமாகும்.
TNPSC Coaching Center Join Now
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
- விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CMPDI விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இப்பணிக்கு என்று பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவத்தை தயார் செய்து, அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும் படி, தபால் செய்ய வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 25.03.2022 ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளதால், நாளையுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. விண்ணப்பதாரர்கள் உடனே இந்த அரசு பணிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.