மணி தவறு செய்ததாக சொன்ன அமுதவாணன்.. தவறை ஒப்புக் கொண்டதால் கிடைத்த பாராட்டு – வெளியான “பிக்பாஸ் ” ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி ஏழாவது வார இறுதிக்கு வந்துள்ளது. இந்த வாரம் முழுவதும் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ:
விஜய் டிவியில் பல ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது ஏழாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வார தலைவராக மைனா நந்தினி இருந்து தனது வேலைகளை சிறப்பாக செய்தார். மேலும் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்ட நிலையில் அதில் தனலட்சுமி, அசிம், ராம், மணிகண்டா, அமுதவாணன், கதிரவன், ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வீட்டில் நடந்த பிரச்சனைகளை கேமரா முன் போட்டியாளர்கள் சொல்ல வேண்டும். அதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதாடி பின் தீர்ப்பு வழங்கப்படும். இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் யாரும் சரியாக சாப்பிட்ட தட்டுகளையும், கப்புகளையும் அங்காங்கே வைத்து விடுவதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது வெளியான ப்ரோமோவில்,ரட்சிதா வழக்கறிஞராக இருக்க குயின்சி நீதிபதியாக இருக்கிறார். அதில் ரட்சிதா நீங்க கப்புகளை வைத்தீர்களா என கேட்க, எப்பவாவது கப் இருந்தால் அதனை எடுத்து கொண்டு சென்று போட்டிருக்கேன். மணி அது போல போடாமல் இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன் என சொல்கிறார். உடனே மணியை விசாரணை செய்ய, இவ்வளவு நாள் அப்படி செய்தேன் இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என சொல்கிறார். பின் அனைவரும் சிரிக்க குயின்சி அமுதவாணனை தள்ளி சென்று அமர சொல்கிறார். உடனே அமுதவாணன் எல்லாரும் தான் சிரித்ததாக சொல்ல, நான் தள்ளி சென்று அமர தான் சொன்னேன் என கோவமாக குயின்சி சொல்கிறார்.