ராதிகா உடன் ஜாலியாக ராட்டினம் சுற்றிய கோபி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா மயூராவை அழைத்துக் கொண்டு கோபி தீம் பார்க் சென்றதை எழில் பார்த்து பெரிய பிரச்சனை ஆன நிலையில், அங்கே உண்மையாவே ராதிகாவும் கோபியும் ராட்டினங்களில் ஏறி என்ஜாய் பண்ண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பாக கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபி எப்போ சிக்குவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தாலும் அது நடந்தால் கதை முடிந்துவிடும். அதனால் கோபி இப்போதைக்கு சிக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் கதையில் அவ்வப்போது வைக்கப்படும் திருப்பங்களே ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது. பாக்கியா குடும்பத்துடன் தீம் பார்க் செல்ல அங்கே ராதிகா மயூராவுடன் வருகிறார்.
கோபியின் திருமணத்திற்கு புறப்பட்ட குடும்பத்தினர் – ஷாக்கான பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபிக்கு அந்த விஷயம் தெரியாமல் இருக்க இனியா அனுப்பிய புகைப்படத்தால் கோபிக்கு உண்மை தெரியவருகிறது. குடும்பத்திடம் இருந்து தப்பிக்க கோபி முயற்சி செய்ய அப்போது எழில் பார்த்துவிடுகிறார். அதனால் எழில் தனது அப்பாவிடம் இந்த குடும்பம் அழுகிற சூழ்நிலை வந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் என சொல்கிறார். கோபி எழில் பேசியதை நினைத்து பயத்துடன் இருக்கிறார். மறுபக்கம் ராதிகாவை வேற வீட்டில் கோபி தங்க வைக்கிறார்.
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை – மகிழ்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்!
அதனால் கதையில் பல முடிச்சுகள் அவிழாமல் இருக்கிறது. இந்நிலையில் தீம் பார்க்கில் கோபி ராதிகா மயூரா ராட்டினங்களில் ஏறி சுற்றுவது போல எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மூவரும் பயத்துடன் அமர்ந்து என்ஜாய் செய்கின்றனர். அப்போது ஒருவர் கோபி இங்கே தான் ராதிகா உடன் இருக்கிறார். பாக்கியாவை வர சொல்லுங்க என சொல்லி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.