கோபியின் திருமணத்திற்கு புறப்பட்ட குடும்பத்தினர் – ஷாக்கான பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!
தன்னுடைய திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு ராதிகா, பாக்கியாவின் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துள்ளார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். மணமேடையில் கோபி இருப்பதை பார்த்து பாக்கியா மிரண்டு போகிறார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் வீட்டில் உள்ள யாருக்கும் சந்தேகம் வராமல் மறைந்து மறைந்து ராதிகாவின் வீட்டிற்கு சென்று வந்த கோபி தற்போது மிக சாதாரணமாக ராதிகா வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார். இரவு நேரங்களில் கூட பாக்கியா வீட்டிற்கு செல்லாமல் ராதிகா வீட்டிலேயே தங்கி விடுகிறார்.
பிக் பாஸ் அல்டிமேட்டில் பணத்தை வென்ற போட்டியாளர் யார் தெரியுமா? ஷாக்காகிய ரசிகர்கள்!
ஒவ்வொரு நாளும் கோபி எப்போது மாட்டிக்கொள்வார் எனவும், அந்த சூழ்நிலையில் என்னமாதிரியெல்லாம் பொய் சொல்ல போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது மயூவும் கோபியை அப்பா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார். ராதிகா, கோபி, மயூ மூவருமே தற்போது ஒரு குடும்பமாக வாழ துவங்கிவிட்டனர். இப்படி பாக்கியாவிற்கு கோபி துரோகம் செய்து கொண்டிருக்கும் நிலையிலும் பாக்கியாவிற்கு கோபி மீது துளி கூட சந்தேகம் வரவில்லை. கோபியின் பாசத்திற்காக தான் பாக்கியா ஏங்கி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ராதிகா மற்றும் கோபியின் திருமண வைபோகம் இந்த வாரம் நடைபெறவுள்ளது. அந்த திருமணத்திற்கு ராதிகா, பாக்கியாவின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைக்கிறார். கோபியை தான் ராதிகா திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பது அறியாமல் ராதிகா இந்த திருமணத்திற்கு பிறகாவது சந்தோசமாக வாழ வேண்டும் என பாக்கியா வேண்டி கொண்டிருக்கிறார். திருமண கோலத்தில் ராதிகாவின் அருகில் அமர்ந்திருக்கும் கோபியை பார்த்த பாக்கியாவின் நிலை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.