அப்பாவி பாக்கியாவை கைவிடுவாரா கோபி? ராதிகாவின் முடிவு என்ன? சீரியலில் அடுத்து வரும் திருப்பங்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அப்பாவியாக இருக்கும் பாக்கியாவை கோபி கைவிட போகிறார். விவாகரத்து வரை சென்ற நிலையில் ராதிகாவுக்கு உண்மை தெரிந்து அவர் விட்டுக் கொடுப்பாரா என்பதே சீரியலில் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் நடவடிக்கை எதுவும் சரி இல்லாமல் இருக்கிறது. பாக்கியாவின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி விவாகரத்து வாங்கிவிட்டார். அந்த உண்மை எதுவும் தெரியாமல் பாக்கியா கோபியை நம்பி வருகிறார். கோபியை பற்றிய உண்மை எல்லாம் தெரிந்தும் கூட ராமமூர்த்தியால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார். பாக்கியாவிடம் கோபியை நம்பாதே என செல்வி அடிக்கடி எச்சரித்து கொண்டே இருக்க செல்வி சொல்வது எல்லாம் நடப்பதால் பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது.
கலர்ஸ் தமிழ் ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் பற்றி ரட்சிதா சொன்ன விளக்கம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இன்றைய எபிசோடில் செழியன் ஜெனி பிரச்சனை தான் காட்டப்பட்டது. செழியன் ஜெனியை புரிந்து கொள்ளாமல் விவாகரத்து வாங்க வேண்டும் என சொல்ல கோவப்பட்ட பாக்கியா பல வசனங்களை பேசுகிறார். அதனால் கோபிக்கு பாக்கியா மீது பயம் வருகிறது. மேலும் ஈஸ்வரியும் தற்போது பாக்கியா சொல்வது தான் சரி என சொல்வதால் கோபி மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் ராதிகாவுக்கு பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை தெரிய போகிறது.
தமிழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் கவனத்திற்கு – AICTE முக்கிய உத்தரவு!
ஆனால் ராதிகாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபியை விட முடியாமல் இருக்க போகிறார். பாக்கியாவை கோபி ஏமாற்றியது தெரிந்து குடும்பமே அதிர்ச்சியில் இருக்க ஆனால் கோபி ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். அதனால் பாக்கியலட்சுமி கதைக்களம் சூடு பிடிக்க இருக்கிறது. மேலும் பாக்கியா இனிமேல் கோபிக்கு எதிராக மாற வேண்டும் இப்படி அப்பாவியாவே காட்டப்பட கூடாது என பலர் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்