திருமணத்திற்கு பிறகு ‘செம்பருத்தி’ ஷபானாவுடன் நடிகர் ஆர்யன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ஆர்யன் தனது காதல் மனைவியும், நடிகையுமான ஷபானாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
நடிகர் ஆர்யன்
சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு சின்னத்திரையில் அபிமான ஜோடியாக வலம் வருபவர்கள் ஷபானா ஷாஜகான் மற்றும் ஆர்யன் தம்பதியினர் தான். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல், ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா மற்றும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ஆர்யன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு தான் அன்றைய நாளில் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. இவர்கள் இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தாலும், இவர்களை சுற்றி திருமணம் தொடர்பான பேச்சுக்கள் எழாமல் இருந்ததில்லை.
‘பாக்கியலட்சுமி’ புது செழியன் கதாபாத்திரம் எப்படி? விகாஸ் ஓபன் டாக்! வைரலாகும் வீடியோ!
ஆனால் தீடீரென ஆர்யன், ஷபானாவை கரம் பிடிக்க, இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு வழக்கம் போல நடிகை ஷபானா ‘செம்பருத்தி’ சீரியலில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் செழியனாக நடித்து வந்த நடிகர் ஆர்யன் சமீபத்தில் இத்தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கான உண்மை காரணம் எதுவும் சரிவர தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயிருக்க ஆர்யன், ஷபானாவுடன் தனது மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.
அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில்ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் ஆர்யன், அவ்வப்போது வெளியிடும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதே போல இப்போது கூட ஷபானாவுடன் அவுட்டிங் சென்றிருக்கும் ஆர்யன் இருவரும் சேர்ந்து இருப்பதை போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் எப்போதும் போல லைக்குகளை குவித்து வருகின்றனர்.