விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் டெரரான ரோலில் நடித்து வரும் சதீஷ் 2000ம் ஆண்டு சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு படத்தில் மிகச் சிறப்பாக ஒரு வேடத்தில் நடித்திருப்பார். சதீஷ் பற்றிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலில் ஒரு குடும்பத் தலைவியின் உணர்வுகளை கூறும் விதமாக இந்த கதை அமைந்திருப்பதால் இது வீட்டில் இருக்கும் பெண்களை மட்டுமல்லாமல் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அந்த தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். சீரியலில் கோபி கதாபாத்திரத்திற்கு ஒரு அழகான குடும்பம் இருந்தும் அதை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது போல காட்டப்படும். பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கோபியை திட்டித் தீர்த்து வருகிறார்கள். அந்த அளவுக்கு பொய் பித்தலாட்டம் செய்து குடும்பத்தை ஏமாற்றும் நபராக தான் கோபி கதாபாத்திரம் இருக்கும்.

ராதிகாவுடன் திருமணம் பற்றி அறிந்து கோபியை கண்டபடி அடித்த பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகரான சதீஷ் சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி உள்ளிட்ட பல்வேறு தமிழ் சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால் மற்ற சீரியல்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பும், புகழும் இவர் தற்போது நடித்து வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் அவருக்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சதீஷ், 1979ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். தமிழ் சின்னத்திரையில் நடிகராகவும், மாடலாகவும் நமக்கு அறியப்படும் நடிகர் சதீஷ் 1999ம் ஆண்டு தமிழில் வெளியான ‘மின்சார பூவே’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய முத்துராசு – விறுவிறுப்பான திருப்பங்களுடன் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’!

இந்நிலையில் நடிகர் சதீஷ் எம்ஜிஆர் ரோலில் இதற்கு முன்பு நடித்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவரே இதற்கு முன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தை துவங்கி வைத்தது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவர். சீரியல்கள் படங்களை தொடர்ந்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்றால், அந்த கதாபாத்திரத்திற்கு 100 சதவீத உழைப்பு கொடுத்து நடிப்பார், இதற்காகவே இவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!